திங்கள், 24 ஜூன், 2024

திருக்கோளக்குடியும் தேரோட்டமும்.. திருக்கோளநாதர், ஆத்மநாயகி அம்பாள் திருத்தேரோட்டம்..

Thirukolakudi car festival 



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது திருக்கோளக்குடி கிராமம். இங்கு மலைக்குன்றின் மீது சிவன் திருக்கோளநாதராகவும் அம்பாள் ஆத்மநாயகியாகவும் தோன்றி அருள்பாளித்து வருகின்றனர். 

திருக்கோளக்குடி கோவில்


இங்கு மொத்தம் நான்கு ஆலயங்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தில் சிவன் பொய்யாமொழிசுவராக அருள்பாளித்து வருகின்றார். அறுபது படிகள் ஏறி குன்றின் மய்ய பகுதியில் சிவன் திருக்கோளநாதராக வீற்றிருக்கிறார். அருகில் தெற்கு பக்கத்தில் அம்பாள் ஆத்மநாயகியாக காட்சியளிக்கிறார். குன்றின் உச்சிக்கு சென்றால் முருகன் ஆலயமும் உள்ளது. அதற்கு அருகில் உள்ள பெரிய பாறை ஒன்றின் உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது ஆனால் அங்கு அவ்வளவு எளிதில் பக்தர்களால் செல்ல முடியாது. 

பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் ஒரு குடைவரை கோவில் ஆகும். இங்கு குடைவரையில் குன்றின் பாறையிலேயே செதுக்கப்பட்ட விநாயகர் ஆலயமும் உள்ளது. 

''சிவ தலங்களில் இந்த திருக்கோளக்குடி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் காயிலாயத்திற்கு ஈடானதாகவும் கூறப்படுகிறது''

அகத்தியர் தவம் செய்த தலமாகும்.  


ஆனித்திருவிழா

               

கொடிமரம்

முதலாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆனித்திருவிழா அன்று சுவாமி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்படும். அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெறும்.

சாமி ஊர்வலம்




அன்றிலிருந்து பத்து நாட்களுக்கு காலையிலும் இரவிலும் சாமி ஊர்வலமும் ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டார கிராமமக்களின் மண்டகபடியும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானங்களும்  வழங்கப்படும். 5 ஆம் நாள் குன்றக்குடி அடிகளார் அவர்களின் மண்டகபடியும் நடைபெறும். 

தேர்



9ம் நாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள் குறுகளான சாலை மண்தரை ஆகியவற்றை கடந்து தான் தேரை இழுப்பார்கள் பல நேரங்களில் மண்ணில் தேரின் சக்கரம் புதைந்து கொள்ளும். அந்நேரங்களில் மிகவும் சிரமப்பட்டே  தேரை இழுப்பார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும். சில வருடங்களுக்கு முன்பு தேர் செல்ல தார் சாலை கிடையாது. மண் பாதை தான் இருக்கும். இந்த மண் பாதை வழியாக தேர் செல்லும் போது மண்ணில் தேரின் சக்கரம் புதைந்து இடையூரு ஏற்படும்.

தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து தேரை இழுக்க முடியாமல் இரண்டு நாட்கள் வரை தேரோட்டம் இங்கு நடந்த வரலாறும் உண்டு. அதன் பின்னர்  தேரின் உயரம் மட்டும் எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் தற்போது அந்த இடையூருகள் குறைந்துள்ளது. 
திருக்கோளநாதரும் ஆத்மநாயகியும்


10ம் நாள் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடைபெறும். 11 ம் நாள் அதிகாலை மீண்டும் சாமி மலை ஏறும் நிகழ்வு நடைபெறுவதோடு ஆனித்திருவிழா நிறைவுபெறும். 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

  நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்ன...