மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜ்லிங்க் மாவட்டத்தின் சிலிகுரியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிலிகுரியில் சிக்னலுக்காக கன்ஜன்சுங்கா என்ற பயணிகள் ரயில் காத்திருந்திருக்கிறது. அப்போது இந்த ரயிலுக்கு பின்னால் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகளின் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் சிக்னல் போடப்பட்டிருப்பதையும் தாண்டி நிற்காமல் வந்து பயணிகள் ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. இந்த விபத்திற்கு சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை கவனிக்காமல் வந்தாரா அல்லது சிக்னல் வேலைசெய்யாமல் போனதால் நடைபெற்றதா என விசாணை நடைபெற்று வருகிறது. ஒரே தண்டவாளத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் வந்தது எப்டி என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விபத்து குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புபடைகளை அனுப்பியிருப்பதாகவும் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
.png)
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக