திங்கள், 10 ஜூன், 2024

மோடி 3.0 விற்கு அதிர்ச்சி குடுத்த கேரள MP. சுரேஷ் கோபி. மீண்டும் மீண்டுமா..!

   



பிரபல மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி கேரள மக்களிடம் தன்

நடிப்பினால் மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதன் மூலமும் மிக பிரபலமானவர். பின்பு இவர் தன்னை பாஜக வில் இனைத்துக் கொண்டார்.
இன்னிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நின்று 
வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலம் முதன் முறையாக பாஜக கேரளாவில் கால் ஊன்றவும் வைத்தார் சுரேஷ் கோபி. 9 ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாஜக இவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவி பிரமாணமும் செய்து வைத்தார்..

இந்நிலையில் தான் சுரேஷ் கோபி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும். மேலும் தான் நிறைய படங்களில் நடித்து வருவதால் தற்போது தான் அமைச்சராக பதவியேற்றால் அந்த படங்களில் நடிப்பதற்கு தடை ஏற்படும் எனவே தான் அமைச்சர் பதவியை ராஜினமா செய்வதாகவும், MP பொறுப்பிலிருந்தே மக்களுக்காக உழைப்பேன் என்றும் செய்திகள் வெளியானது.



   




இந்நிலையில் பலரும் அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் கட்சி முடிவு செய்த பொழுதே கூறியிருக்க வேண்டியதுதானே. பின்னர் ஏன் பதவியேற்று பின்னர் ஏன் பதவிவிலக வேண்டும் என்றும், நடிப்பு தான் முக்கியம் என்றால் ஏன் MP பதவியில் மட்டும் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் சுரேஷ் கோபி வெளியிட்டுள்ள செய்தியில் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் தான் தொடர்ந்து பிரதமர் மோடி அமைச்சரவையிலிருந்து கேரள மக்களின் நலனுக்காக உழைப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும், அதனால் நான் அமைச்சராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.. 
 

கேரள மாநிலம் கொள்ளத்தில் பிறந்த சுரேஷ் கோபி மலையாள படங்களில் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், சிறந்த நடிகருக்கான கேரள விருதையும் பெற்றுள்ளார். 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

  நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்ன...