வியாழன், 13 ஜூன், 2024

தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் குவைத் தீவிபத்தில் பலி..? 50 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி.. Kuwait fire accident..

  



குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாங்காஃப் பகுதியில் உள்ள பணியாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்ப்பட்ட தீவிபத்தில் 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.. 

தீவிபத்து;

                    கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தான் புதன் கிழமை காலை 4 மணியளவில்  தீவிபத்து ஏற்பட்டுள்ளது.. அடுக்குமாடி குடியிருப்பின் சமையலரையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ மளமள வென்று பரவி அங்கிருந்த சமையல் சிலிண்டர்களிலும் தீபற்றி எரிந்துள்ளது.. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் தீயில் கருகியும் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவிய கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக கீழே குதித்தும் 40 மேற்பட்ட தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர். 

விபத்திற்கான காரணம்

                                               தீவிபத்து குறித்து தகவல் அறிந்த குவைத் அரசாங்கம் முழுவீச்சில் தீயணைக்கும் பணியிலும் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் சமையல் அறையில் ஏற்பட்ட மின்கசிவே  தீவிபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.. 

இந்தியாவின் நடவடிக்கை 

                                                தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனே அங்கு சென்று முகாமிட்டு மீட்புபணிகளில்  இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகின்றனர்.. 

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி ,  தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.   பிரதமர் மோடி உத்திரவின் பேரில் குவைத் நாட்டிற்கு விரைந்துள்ள வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரிப்பதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் குறித்து ஆய்வு செய்தார்.



உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறையை நாடியுள்ளார்.

இதுவரை இரண்டு தமிழர்களை காணவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர்கள் குறித்து அரசாங்கமும் அயலக தொழிலாளர் நலச்சங்ககளும் தேடிவருகின்றனர். குவைத் அரசாங்கத்துடன் இணைந்து இந்திய வெளியுறவுத்துறையும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் தீவிபத்து குறித்து தகவல் அறிய அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து சம்பவம் இந்தியா  மற்றும் குவைத் நாட்டுமக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் அவர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இந்த தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து குவைத் அரசாங்கம் சம்மந்தப் பட்ட சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.. 

குடும்ப சுமைகாரணமாக சொந்த நாட்டை வி்ட்டு குவைத் நாட்டிற்கு சென்று பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

  நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்ன...